Friday, August 7, 2009

இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஐ.டி.,கம்பெனியாக டெக் மகிந்திரா வந்தது

இந்த வருட ஆரம்பத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடியை அடுத்து, கடந்த வருடம் வரை இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய ஐ.டி.கம்பெனி என்ற பெயரை பெற்றிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டது. அந்த நிறுவனத்தை மகிந்திரா அண்ட் மகிந்திரா குழுமத்தை சேர்ந்த டெக் மகிந்ரா வாங்கி, அதை மகிந்திரா சத்யம் என்று பெயர் மாற்றி நிர்வகித்து வந்த போதிலும் இழந்த பெயரை மீண்டும் பெற முடியவில்லை. ஆனால் சத்யத்தை வாங்கியிருக்கும் டெக் மகிந்திரா நிறுவனம் இதுவரை ஆறாவது இடத்தில் இருந்து வந்தது. அது இப்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. முதல் ஐந்து இடங்களில் இருந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் விலகி விட்டதால், ஐந்தாவது இடத்தில் இருந்த அதன் போட்டி நிறுவனமான ஹெச்.சி.எல்., நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டது. முதல் மூன்று இடங்களில் முறையே டி.சி.எஸ்.,இன்போசிஸ் மற்றும் விப்ரோ தொடர்ந்து இருந்து வருகின்றன. தொழில் அமைப்பான நாஸ்காம் சமீபத்தில் வெளியிட்ட மதிப்பீட்டில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் மகிந்திரா சத்யம் நிறுவனம் இன்னும் அதன் முழு நிதி ஆண்டு தணிக்கை அறிக்கையை வெளியிடாததால், அது எத்தனாவது இடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.
நன்றி : தினமலர்


1 comment:

துபாய் ராஜா said...

நல்லதொரு தகவல்.