Friday, August 7, 2009

இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களின் முதலீடு 25 சதவீதம் குறையும்

இன்னும் மூன்று வருடங்களில் இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டு வைத்திருக்கும் முதலீட்டில் இருந்து 25 சதவீதம் குறைந்து விடும் என்று கிரிசில் என்ற கிரிடிட் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருக் கிறது. 11 வெவ்வேறு துறைகளை சேர்ந்த 500 தொழில் நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்த கிரிசில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. கம்பெனி விரிவாக்க திட்டத்திற்காக இன்னும் மூன்று ஆண்டுகளில் ரூ.13 லட்சம் கோடியை முதலீடு செய்வோம் என்று அந்த நிறுவனங்கள் இப்போது அறிவித்திருக்கின்றன. ஆனால் அவைகள் ரூ.10.05 கோடியை தான் முதலீடு செய்யும் என்று கிரிசில் தெரிவிக்கிறது. டெக்ஸ்டைல், ஆட்டோ, ஆயில் ரீஃபைனரி போன்ற துறைகளில், அறிவித்ததை விட முதலீட்டு செலவீனம் குறைந்து விடும் என்று சொன்னாலும், பவர் துறையில் முதலீடு 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கத்தான் செய்யும் என்றார் கிரிசில் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மனோஜ் மோத்தா. கேஸ் வினியோகத்துறையிலும் முதலீடு இரட்டிப்பாகி விடும் என்றார் அவர். இது நமது பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதுதான் என்கிறார் அவர். இதற்கு முன் 1997 - 1998 மற்றும் 2002 - 2003 ஆண்டுகளில் பொருளாதாரம் வீழ்ந்திருந்த நேரத்தில் இந்திய தொழில் நிறுவனங்களின் முதலீடு வருடத்திற்கு 1 முதல் 2 சதவீதம் என்ற வகையில் குறைந்திருந்தது. அதற்கு காரணம் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாலும், உற்பத்தி பொருட்களுக்கான தேவை குறைந்து போகும் என்ற பயம் இருந்ததாலும்தான் என்கிறார் மோத்தா.
நன்றி : தினமலர்


No comments: