Tuesday, November 25, 2008

சரிவில் முடிந்தது இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில், பகல் 2 மணி வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ்,பின்னர் குறைய துவங்கியது. ஆசிய சந்தைகள் உயர்ந்திருந்ததை தொடர்ந்து உயர்ந்திருந்த சென்செக்ஸ், பின்னர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து சரிய துவங்கியதாக சொல்கிறார்கள். காலையில் உயர்ந்து கொண்டிருந்த சந்தையை பார்த்து உற்சாகத்தில் இருந்த வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கிய சந்தையை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 207.59 புள்ளிகள் ( 2.33 சதவீதம் ) குறைந்து 8,695.53 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 54.25 புள்ளிகள் ( 2 சதவீதம் ) குறைந்து 2,654 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி., டி.சி.எஸ்., பெல், ஐ.டி.சி., மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை இன்று சரிவை சந்தித்தன. இன்று ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் சரிவில் இருந்தாலும் ஆசிய சந்தை உயர்ந்து தான் முடிந்திருந்தது.நிக்கி 5.22 சதவீதம், ஸ்டெயிட் டைம்ஸ் மற்றும் தைவான் முறையே 2 மற்றும் 2.6 சதவீதம், ஹேங்செங் 3.38 சதவீதம், ஜகர்தா மற்றும் கோஸ்பி முறையே 1.12 மற்றும் 1.36 சதவீதம் உயர்ந்திருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிவில்தான் இருக்கின்றன.
நன்றி : தினமலர்


No comments: