Friday, November 21, 2008

ஏழு நாள் சரிவிக்குப்பின் இன்று ஏறியது பங்கு சந்தை

தொடர்ந்து ஏழு வர்த்தக நாட்களாக சரிந்திருந்த பங்கு சந்தையில் இன்று ஏற்ற நிலை காணப்பட்டது. ஷார்ட் கவரிங் வர்த்தகத்தாலும், உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகவும் இந்திய பங்கு சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடைசி நேர வர்த்தகத்தில் நிப்டி 2,700 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தாலும் அது அதிக நேரத்திற்கு நிலைக்கவில்லை. பவர், ஆயில் அண்ட் கேஸ், கேப்பிடல் குட்ஸ், பேங்கிங், டெலிகாம், மற்றும் டெக்னாலஜி பங்குகள் இன்று பெருமளவில் வாங்கப்பட்டன. இன்றைய வர்த்தகத்தில் 8,988.03 புள்ளிகள் வரை வந்திருந்த சென்செக்ஸ், பின்னர் வர்த்தக முடிவில் 464.20 புள்ளிகள் ( 5.49 சதவீதம் ) உயர்ந்து 8,915.21 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2,718.60 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் முடிவில் 140.30 புள்ளிகள் ( 5.50 சதவீதம் ) உயர்ந்து 2,693.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்ஃரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி., மாருதி சுசுகி, ஹெச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., நால்கோ, நிறுவன பங்குகள் 8 - 14 சதவீதம் உயர்ந்திருந்தன. இருந்தாலும் டி.எல்.எப்., யூனிடெக், ஏ.சி.சி., டாடா கம்யூனிகேஷன், மற்றும் டாடா பவர் நிறுவன பங்குகள் சரிந்திருந்தன. இன்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் வளர்ச்சி அடைந்திருந்தன. ஆசிய சந்தைகளை பொருத்தவரை, ஷாங்கை மற்றும் ஜகர்த்தா சந்தைகள் மட்டும் வீழ்ச்சி அடைந்திருந்தன. மற்ற சந்தைகளில் வளர்ச்சிதான்.
நன்றி : தினமலர்


No comments: