Friday, November 21, 2008

அக்வாஃபினா பாட்டிலில் பனிபடர்ந்த மலை படத்தை போடக்கூடாது : டில்லி ஹைகோர்ட் உத்தரவு

பெப்சி கம்பெனி வெளியிடும் அக்வாஃபினா மினரல் வாட்டர் பாட்டிலின் லேபிளில், இனிமேல் பனிபடர்ந்த மலை படத்தை போடக்கூடாது என்று பெப்சி நிறுவனத்திற்கு டில்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் இந்த படத்தை எடுத்து விட வேண்டும் என்று சொன்ன ஹைகோர்ட் பெஞ்ச், அந்த லேபிளில் பிரின்ட் செய்யப்படும் ' பி.ஐ.எஸ் ஸ்டாண்டர்ட் படி' என்ற வாசகத்தையும் ' பியூரிட்டி கியாரன்டி ' என்ற வாசகத்தையும் எடுத்துவிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. நீதிபதிகள் முகுள் முத்கள் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய இரு நபர் பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பனிபடர்ந்த மலையை பார்த்ததும், இந்த கம்பெனி, மலை மீதிருக்கும் அதன் தொழிற்சாலையில் இருந்துதான் இந்த மினரல் வாட்டர் பாட்டிலை தயாரிக்கிறது என்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறது என்று 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்' ( பி.ஐ.எஸ். ), பெப்சி மீது தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. ஏற்கனனே இந்த வழக்கில் ஒரு நபர் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் அந்த படத்தை எடுக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. அதை எதிர்த்து பி.ஐ.எஸ்., தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் இரு நபர் பெஞ்ச், படத்தையும் குறிப்பிட்ட வாசகத்தையும் எடுத்துவிட வேண்டும் என்று இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
நன்றி : தினமலர்