Monday, July 28, 2008

பங்கு சந்தையில் லேசான முன்னேற்றம்


ரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கைக்கான கூட்டத்தை நாளை கூட்டியுள்ளதை அடுத்து இன்று பங்கு சந்தை நிதானமாகவே நடந்தது எனலாம். பெரும்பாலான பங்கு வர்த்தகர்கள், நாளை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான பெபோ ரேட்டை உயர்த்தும் என்று எதிர்பார்த்தார்கள். எனவே காலை மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே அவ்வளவாக உயராமலும் அவ்வளவாக குறையாமலும் இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 74.17 புள்ளிகள் மட்டும் ( 0.52 சதவீதம் ) உயர்ந்து 14,349.11 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 20.25 புள்ளிகள் ( 0.47 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,332.10 புள்ளிகளில் முடிந்தது. கேபிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ், ரியாலிடி, பார்மா துறை பங்குகள் வாங்கப்பட்டன. பி எஸ் இ மிட்கேப் 1 சதவீதமும் ஸ்மால் கேப் 2 சதவீதமும் உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


No comments: