Monday, July 28, 2008

நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதால் அரசுக்கு லாபம் ரூ.64,000 கோடி


கடந்த 22ம் தேதி பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதால் பங்கு வர்த்தகம் மூலம் அது ரூ.86,600 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.ஜூலை 9ம் தேதி ரூ.7.42 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு மதிப்பு, இப்போது ரூ.8.29 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் ரூ.63,900 கோடி அரசுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. மத்திய அரசுக்கு 87 முதல் 98 சதவீதம் பங்குகள் இருக்கும் நேஷனல் அலுமினியம், ஐ டி ஐ, ஹெச் எம் டி, போன்ற நிறுவன பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது தவிர என் டி பி சி, ஓ என் ஜி சி, என் எம் டி சி, ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் கடந்த ஜூலை 9ம் தேதிக்குப்பின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த பங்குகள் 11.9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலத்தில் சென்செக்ஸ் மொத்தத்தில் 2.2 சதவீத புள்ளிகளே உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


No comments: