Friday, July 25, 2008

கிரெடிட் கார்டு நடைமுறையில் வங்கிகள் கெடுபிடி : தடுக்க ரிசர்வ் வங்கி புது உத்தரவு


கிரெடிட் கார்டுகளுக்கு அதிக கட்டணம் மற்றும் பயனீட்டாளர்களை பாதிக்கும் வங்கி கெடுபிடி நடவடிக்கைகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை, வழிகாட்டிக் குறிப்புகளை வகுத்துள்ளது.
கிரெடிட் கார்டு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி அடிப்படையில் எழுப்பப்படும் பிரச்னைகளைக் குறைக்க வழிகண்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டிக் குறிப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல்: தேவைப்படாதவர்களுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்குவதோ, அப்படி வழங்கப்படும்போது, அதை பெறுபவரின் கணக்கை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து அதற்கான விசேஷ கட்டணம் வசூலிக்கக் கூடாது.
அவ்வாறு கட்டணம் வசூலித்தால், அதை திரும்ப பயனீட்டாளருக்கு அளிப்பதோடு, அவர் பெற்ற மன உளைச்சலுக்காக அபராதத் தொகையாக வங்கிகள், இரண்டு மடங்கு திருப்பி அளிக்க வேண்டும். கார்டு தேவையில்லை என்பவருக்கு அனுப்பி, அதனால் வரும் பிரச்னைக்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும்.
அத்துடன், யார் பெயரில் கிரெடிட் கார்டு அனுப்பப்பட்டதோ, அவர் வங்கி ஓம்பட்ஸ்மேனை அணுகலாம். அங்கு, எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.
இதற்கு ஏற்படும் செலவு, துண் புறுத்தல்கள், மன அமைதி கெடுதல் போன்றவற்றுக்கு ஏற்ப, இழப்பீடு தொகை வரையறுக்கப்படும். கிரெடிட் கார்டு வழங்கப்படும் போது, சில வங்கிகள் அவற்றுக்கு காப்பீடு பாலிசிகளையும் அளிக் கின்றன. இதற்காக, வேறு சில காப்பீடு நிறுவனங்களுடன் உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
அப்படிப்பட்ட நிலையில், கிரெடிட் கார்டு தாரர் விபத்தின் போது, இறந்து பேனாலோ, நிரந்தர ஊனமடைந் தாலோ, அதற்கான பயன்கள் யாரைச் சென்றடைய வேண்டும் என்ற நியமனதார் பெயருடன் விண்ணப்பத்தை நிரப்பி வாங்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கிரெடிட் கார்டு தாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு தவறாக பயன்படுத் துவதை தவிர்க்க, புகைப்படம், கையெழுத்துடன் லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளை வழங்கலாம். மாதம் தோறும் கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு பரிவர்த்தனைகள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தெரியப்படுத்தும் நடைமுறை உருவாக்க வேண்டும். கிரெடிட் கார்டு கணக்கு பாக்கி விபரம் முன்கூட்டியே தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்டவர் அத்தொகையைச் செலுத்த கால அவகாசம் குறைந்தது 15 நாட்களாவது இருக்க வேண்டும். அதற்குப் பின் தான் கட்டாத தொகைக்கு வட்டி வசூலிக்கலாம்.
இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறைகளை வங்கிகள் உடனடியாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நன்றி :தினமலர்


No comments: