Friday, July 25, 2008

வருமான வரி கட்டும் முறை மேலும் எளிமையாகிறது


வரி கட்டுபவர்கள், இனிமேல் எந்த ஒரு நபரின் எந்த பேங்க் அக்கவுன்ட் மூலமாகவும் வரியை கட்டலாம் என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் ( சி பி டி டி ) தெரிவித்திருக்கிறது. இப்போதைய பணம் செலுத்தும் முறையில் பல சிக்கல்கள் இருப்பதாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் வரி செலுத்துபவர்கள் சொல்லி வந்ததை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சி பி டி டி தெரிவித்திருக்கிறது. டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலமாகவும் இனிமேல் வரி கட்டலாம். இந்த வருடம் ஏப்ரலில் இருந்து தான் நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் எலக்ட்ரானிக் முறையில் வரி கட்டலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இனிமேல் வரி கட்டுபவர்கள் யாருடைய அக்கவுன்டில் இருந்தும் எலக்ட்ரானிக் முறையில் பணம் கட்டலாம். ஆனால் அதற்கான செலானில் மட்டும் வரி கட்டுபவரது பான் நம்பரை தவராமல் குறிப்பிட வேண்டும் என்று சி பி டி டி தெரிவித்திருக்கிறது. அவரவர்கள் பேங்க் அக்கவுன்டில் இருந்துதான் பணம் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை.

நன்றி : தினமலர்


No comments: