Friday, July 25, 2008

இலக்கு ரூ.28 ஆயிரம் கோடி கே.வி.பி., சேர்மன் அறிவிப்பு


''கரூர் வைஸ்யா வங்கியின் நடப்பாண்டு வணிக இலக்கு, ரூ.28 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது,'' என்று மகா சபை கூட்டத்தில் சேர்மன் குப்புசாமி அறிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கி 89வது மகா சபை கூட்டம், கரூர் தலைமை அலுவலகத்தில் நடந்தது. வங்கி சேர்மன் குப்புசாமி பேசியதாவது: கடந்த நிதியாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ.22 ஆயிரத்து 118.83 கோடி எட்டியதுடன், மொத்த வணிக வளர்ச்சியில் 33.77 சதவீதத்தை எட்டியுள்ளது.
வங்கியின் மொத்த வருமானம் 30.69 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. ஆயிரத்து 289.33 கோடியை எட்டியது. வங்கியின் நிகர லாபம் ரூ.160.01 கோடியில் இருந்து 30.2 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.208.33 கோடியை எட்டியது. நடப்பு நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.28 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டை, 'இளைய சமுதாயத்தினர்' ஆண்டாக கடைப்பிடிக்கிறது. 'யுவசக்தி' என்ற புதிய சேமிப்பு கணக்கு திட்டத்தை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விமானம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய டெபிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஆன்-லைன் பில் பேமன்ட்,' 'ஆன்-லைன் ஷாப்பிங்,' 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம், 'டிராவல் கார்டு' மற்றும் 'கிப்ட் கார்டு' வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.இவ்வாறு சேர்மன் குப்புசாமி பேசினார்.


நன்றி :தினமலர்


No comments: