Thursday, July 24, 2008

இந்தியாவில் 17 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது இன்டெல்

கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பாளரான இன்டெல் கார்பரேஷனின் ஒரு அங்கமாக இன்டெல் கேப்பிடல், மூன்று இந்திய கம்பெனிகளில் 17 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது என்று, இன்டெல் கார்பரேஷனில் எக்ஸிகூடிவ் வைஸ் பிரசிடென்ட் ஆகவும் இன்டெல் கேப்பிட்டலின் தலைவராகவும் இருக்கும் அர்விந்த் சோதானி தெரிவித்தார். இரண்டு இன்டர்நெட் நிறுவனங்களிலும் ஒரு விளம்பர நிறுவனத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படும் என்று அவர் புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆன்லைன் டிராவல் நிறுவனமான யாத்ரா டாட் காம், நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமான பஷ்ஷின் டவுன் டாட் காம், மற்றும் எம்னெட் சம்சாரா மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இந்த தொகை முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் 1998ல் துவங்கப்பட்ட இன்டெல் கேப்பிடல் நிறுவனம், இதுவரை எட்டு நகரங்களில் சுமார் 50 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. டிசம்பர் 2005ல் 250 மில்லியன் டாலர் முதலீட்டில் துவங்கப்பட்ட இன்டெல் கேப்பிடல் இந்தியா டெக்னாலஜி ஃபண்ட்டிலிருந்து இந்த தொகை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: