Thursday, July 24, 2008

கீழே இறங்கிய இன்றைய பங்கு சந்தை


கடந்த ஐந்து நாட்களாக ஏறி இருந்த பங்கு சந்தை இன்று கீழே இறங்கி விட்டது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 2,300 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் இன்று இறக்கத்தில் முடிந்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்ட சரிவு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. 11.91 சதவீதமாக இருக்கும் பணவீக்கம் 12 சதவீதத்தை தாண்டி விடும் என்ற எதிர்பாõர்ப்பு இருந்ததும் பங்கு சந்தை சரிவுக்கு காரணம் என்கிறார்கள். மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 165.27 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) குறைந்து 14,777.01 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 43.25 புள்ளிகள் ( 0.97 சதவீதம் ) குறைந்து 4,433.55 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது டி சி எஸ், டாடா ஸ்டீல், ஏ சி சி, டாடா பவர் நிறுவனங்கள்தான். இந்நிலையிலும் நால்கோ, ஜீ என்டெர்டெய்ன், ஓ என் ஜி சி, டி எல் எஃப், ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்திருந்தன.

நன்றி :தினமலர்

No comments: