Thursday, July 24, 2008

ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயரத்தும் ?


பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என்று ராய்ட்டர் செய்தி நிறுவன கணிப்பு தெரிவிக்கிறது. தற்போது 12 சதவீதத்தை ஒட்டி இருக்கும் பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை சீரமைப்பு கூட்டத்தில் ரெபோ ரேட் 0.25 முதல் 0.5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் டபுள் டிஜிட்டுக்கு சென்றதை அடுத்து ரிசர்வ் வங்கி சமீபத்தில்தான் ரெபோ ரேட்டை உயர்த்தியது. சமீபத்தில் பணவீக்கம் உயர்ந்ததற்கு பெரிதும் காரணமாக இருந்தது, உற்பத்தி துறையில் ஏற்பட்ட பணவீக்க உயர்வுதான் என்கிறார் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் பொருளாதார நிபுணர் சோனல் வர்மா. உற்பத்தியாளர்கள் அவர்களுக்கு ஏற்படும் உற்பத்தி செலவை நுகர்வோரிடம் திணிப்பதாலும், ஊழியர்கள் அதிகம் சம்பளம் கேட்பதும் பணவீக்க உயர்வுக்கு காரணம் என்கிறார் அவர். பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் அடுத்த வாரத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை உயர்த்தும் என்றும், இன்னும் ஒரு 0.5 சதவீத ரேட்டை இந்த வருட இறுதிக்குள் உயர்த்தும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி : தினமலர்


No comments: