Friday, December 4, 2009

அர​சுப் பேருந்​து​க​ளின் அவ​லம்!

சில தினங்​க​ளுக்கு முன்பு தனி​யார் பேருந்​து​க​ளில் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​ட​தா​க​வும்,​ இத​னால் அதி​ருப்தி அடைந்த பய​ணி​கள் ஆட்​சி​ய​ரி​டம் மனு கொடுக்க,​ அவர் நட​வ​டிக்கை எடுக்க சம்​பந்​தப்​பட்ட துறை​யி​ன​ருக்கு உத்​த​ர​விட்​ட​தா​க​வும்,​ இதை​ய​டுத்து,​ கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்ட சில தனி​யார் பேருந்​து​க​ளில் மீண்​டும் பழைய கட்​ட​ணமே வசூ​லிக்​கப்​பட்​ட​தா​க​வும் பத்​தி​ரி​கை​க​ளில் செய்தி ஒன்று கண்​ணில்​பட்​டது.

​ ​ ​ ​அப்​போது,​ அர​சுப் பேருந்​து​க​ளில் முறை​யான அறி​விப்​பின்றி சில மாதங்​க​ளா​கக் கூடு​தல் கட்​ட​ணம் வசூ​லிக்​கப்​பட்டு வரு​வது நினை​வுக்கு வந்​தது. ஆட்​சி​ய​ரி​டம் மனு கொடுத்​த​தும்,​ தனி​யார் பேருந்​து​க​ளில் கூடு​தல் கட்​ட​ணம் குறைக்​கப்​ப​டு​கி​றது. ஆனால்,​ பொது​மக்​கள்,​ வியா​பா​ரி​கள்,​ பய​ணி​கள் என பல்​வேறு தரப்​பி​ன​ரும் பல​கட்ட போராட்​டங்​கள் நடத்​தி​யும் அர​சுப் பேருந்​து​க​ளில் ஏற்​றப்​பட்ட கட்​ட​ணங்​கள் இது​வரை குறைக்​கப்​பட்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.

​ ​ வாக்​கு​கள் மீது இருக்​கும் அச்​சம்​கூட வாக்​கா​ளர்​க​ளி​டம் தங்​க​ளுக்கு இல்லை என்​பதை சில மாதங்​க​ளுக்கு முன்பு நடை​பெற்ற தேர்த​லின்​போது ஆட்​சி​யா​ளர்​கள் நிரூ​பித்​ததை மக்​கள் அறி​வர். பொது​மக்​கள் மீது தேர்​த​லுக்கு உள்ள இரக்​கம்​கூட ஆட்​சி​யா​ளர்​க​ளி​டம் இல்​லையோ என எண்​ணத் தோன்​று​கி​றது.

​ ​ சில வழித்​த​டங்​க​ளில் இயங்​கும் பேருந்​து​க​ளில் அதி​கா​ரி​க​ளின் நாளொரு உத்​த​ர​வால்,​ பொழு​தொரு கட்​ட​ணம் வசூ​லிக்​கப்​ப​டு​வ​தால் ஏழை,​ எளி​யோர் பாதிக்​கப்​ப​டு​வது ஆட்​சி​யா​ளர்​க​ளின் பார்​வைக்​குத் தெரி​யாத பகல் நிலா.

​ ​ வரும் துன்​பங்​க​ளைச் சிறிது காலம் பொறுத்​துக் கொண்​டால் பின்பு அதுவே பழ​கி​வி​டும் என்​ப​து​போல ஏற்​றப்​பட்ட கட்​ட​ணங்​கள் பய​ணி​க​ளுக்​குப் பழ​கி​விட்​டன.

​ ​ போக்​கு​வ​ரத்​தைப் பொறுத்​த​வரை தனி​யா​ரின் சேவை அர​சின் சேவை​யை​விட திருப்​தி​க​ர​மாக உள்​ளது என்​பதே பெரும்​பான்​மை​யான பொது​மக்​க​ளின் கருத்து.

​ ​ நக​ரங்​கள்,​ கிரா​மங்​கள் என்ற வேறு​பா​டில்​லா​மல் தனி​யார் பேருந்​து​கள் எப்​போ​தும் பள​ப​ளப்​பும்,​ சுறு​சு​றுப்​பும் மாறா​தவை. ஆனால்,​ அர​சுப் பேருந்​து​களோ நக​ருக்​குள்​ளும்,​ பெரு நக​ரங்​க​ளுக்கு இடை​யே​யும் இயக்​கப்​ப​டும் பேருந்​து​கள் பள​ப​ளப்பு,​ தாழ்​த​ளம் என பல்​வேறு வச​தி​கள் கொண்​டவை. கிரா​மப்​பு​றங்​க​ளுக்கு இயக்​கப்​ப​டும் பஸ்​க​ளின் நிலை​மையோ டெபா​சிட் இழந்த வேட்​பா​ள​ரின் நிலை​மை​போல மிக​வும் பரி​தா​பம்.

​ ​ மழைக்​கா​லங்​க​ளில் ஒழு​கு​தல்,​ குறிப்​பிட்ட நேரத்​தைத் தாண்​டி​யும் தேநீர் குடித்​த​படி உலக நடப்​பைப் பேசிக் கொண்​டி​ருக்​கும் ஓட்​டு​நர்,​ நடத்​து​நர்​கள்,​ இந்த வழித்​த​டத்​தில் செல்​லாது,​ நிறுத்​தங்​க​ளில் நிற்​காது என குரல் உயர்த்​தும் அறி​விப்​பு​கள்...இவை​யெல்​லாம் அரசு பேருந்​து​க​ளில் பிர​சித்​தம். தனி​யார் பேருந்​து​க​ளிலோ இது​போன்ற குறை​கள் எண்​பது சத​வி​கி​தம் இல்லை என்றே கூற​லாம்.

​ ​ பய​ணி​க​ளின் நிலைமை,​ வயது போன்​ற​வற்றை அனு​ச​ரித்து நிறுத்​தங்​கள் இல்​லாத இடங்​க​ளில்​கூட இறக்​கி​வி​டு​தல்,​ அனைத்து நிறுத்​தங்​க​ளில் நின்​றா​லும் குறிப்​பிட்ட நேரத்​தில் இலக்கை அடை​தல் போன்​றவை தனி​யார் பேருந்​து​க​ளின் கூடு​தல் பலம்.

​ ​ மற்ற விஷ​யங்​க​ளில் எப்​ப​டியோ,​ அரசு பேருந்​து​கள் விஷ​யத்​தில் "வடக்கு வாழ்​கி​றது,​ தெற்கு தேய்​கி​றது' என்​பதே உண்மை என்​பதை தென் மாவட்ட மக்​கள் அறி​வர்.

​ ​ ஒட்​டடை,​ அகற்​றப்​ப​டாத குப்​பைக் கூளங்​கள்,​ உடைந்த ஜன்​னல் கண்​ணா​டி​கள்,​ நசுங்​கிய படிக்​கட்​டு​கள்,​ கிழிந்த இருக்​கை​கள்...என சில அர​சுப் பேருந்​து​க​ளின் அவ​லங்​கள் சொல்​லில் அடங்​கா​தவை.

சில பேருந்​து​க​ளில் சிலந்​தி​கள் போன்ற சின்​னச்​சின்ன ஜந்​துக்​கள் டிக்​கெட்​டும் எடுக்​கா​மல்,​ பஸ் பாஸýம் இல்​லா​மல் பய​ணிப்​ப​தைப் பார்த்​தால் பய​ணி​க​ளுக்​குப் பொறா​மை​கூட உண்​டா​க​லாம். வடக்​கில் ஓடி வய​தா​கித் தேய்ந்த பல பேருந்​து​கள் தெற்​கில் இயக்​கப்​ப​டு​கின்​றன என்ற குற்​றச்​சாட்டு இருப்​ப​தும் நினை​வில் கொள்​ளத்​தக்​கது.

மேலும்,​ அதிக எண்​ணிக்​கை​யில் இயக்​கப்​பட்டு வந்த நகர பேருந்​து​களை தாழ்​த​ளப் பேருந்​து​கள் ஓரங்​கட்டி விட்​ட​தால்,​ பய​ணி​கள் வேறு​வ​ழி​யின்றி தாழ்​த​ளப் பேருந்​து​க​ளில்​தான் செல்ல வேண்​டிய நிர்​பந்​தம். ஏறக்​கு​றைய தமி​ழ​கத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் இதே​நி​லை​தான்.

தனி​யாரா,​ அரசா என பொது​மக்​கள் அந்​த​நாள்​தொட்டு இந்​த​நாள்​வரை குழம்​பித் தவிக்​க​லாம். ஆனால்,​ அரசோ தெளி​வா​கவே உள்​ளது. இல்​லை​யெ​னில்,​ அர​சுப் பேருந்​து​க​ளில் கட்​ட​ணம் ஒன்​றி​ரண்டு ரூபாய்​கள் உயர்த்​தப்​பட்​ட​தற்​கா​கப் ​ பொது​மக்​கள் போரா​டிக் கொண்​டி​ருக்​கும்​போது,​ கோடிக்​க​ணக்​கான ரூபா​யைக் கொட்​டித்​தர மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​துக்கு தனி​யா​ரைத் தேர்வு செய்​யுமா அரசு?​
கட்டுரையாளர் :மா. ஆறு​முக கண்​ணன்
நன்றி : தினமணி

4 comments:

Unknown said...

மருத்துவ காப்பு திட்டம் தனியார் வசம்.அந்த தனியார் யார் வசம்.

பாரதி said...

அரசியல்வாதி வசம்.

Mohan வருகைக்கு நன்றி

Aks said...

This i already faced many times, Govt bus always opt for 3 to 5 breaks, but private buses are opt for only one break. I dont know govt bus driver come for eating or driving the dappa bus

பாரதி said...

Senthilkumar A K வருகைக்கு நன்றி