Friday, December 4, 2009

புதிய மொபைல் போன் 'நோக்கியா' அறிமுகம்

இ.மெயில் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து விதமான நவீன வசதிகளுடன் கூடிய புதிய மொபைல் போனை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் துறையில், முன்னிலை வகிக்கும் நோக்கியா நிறுவனம் இ72 என்கிற புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த மொபைல் போனை தொழில் சார்ந்த தேவை களுக்கும், தனிப்பட்ட தேவைகளுக்கும் இ-மெயில் அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து, நிறுவனத்தின் தெற்கு மண்டல பொது மேலாளர் ஸ்ரீதர் கூறியதாவது: சோடியம் பிளாக், டோபாஸ் பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இந்த மொபைல் போன் எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலில் 250 எம்பி மெமரி, 5 மெகா பிக்ஸ் ஆட்டோ போகஸ் கேமரா, இரைச்சல் நீக்கும் தொழில் நுட்பம், அதிவேக பிராட்பேன்ட் இணைப்பு, மைக்ரோ மெமரி கார்டு ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். வழக்கமான மற்ற சேவைகளும் இதில் உண்டு. விலை 22 ஆயிரத்து 989 ரூபாய். இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: