Friday, November 20, 2009

வருவாய் அதிகரிக்க பொதுத் துறை வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க முடிவு

பொதுத் துறை வங்கிகளை இணைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மூலதன இருப்பு விகிதம் குறைவாகவும் வாராக்கடன் அதிகமாகவும் உள்ள சிறிய அளவிலான பொதுத் துறை வங்கிகளை, பெரிய வங்கிகளுடன் இணைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதற்காக முன்னணி பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. சிறிய அளவில் செயல்பட்டு வரும் வங்கிகள் பெரிய வங்கிகளுடன் செயல்படும் போது, அவற்றின் வருவாய் அதிகரிப்பதுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிய வங்கிகளின் பங்களிப்பு அதிகளவில் அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர்


No comments: