Wednesday, November 11, 2009

ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கியுள்ள வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள் இணைந்து ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கி உள்ளன. பேங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி, பிரிட்டனைச் சேர்ந்த லீகல் அன்ட் ஜெனரல் உள்ளிட்ட வங்கிகள் கூட்டாக இணைந்து ஆயுள் காப்பீடு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும், இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தில் பேங்க் ஆப் பரோடா 44 விழுக்காடு பங்குகளையும், ஆந்திரா வங்கி 30 விழுக்காடு பங்குகளையும், லீகல் அண்டு ஜெனரல் நிறுவனம் 26 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கும்.
இந்த கூட்டு நிறுவனம் ரூ.200 கோடி மூதலீட்டுடன் தொடங்கப்பட உள்ளது. இதன் முதலீட்டு அளவை அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.2,500 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஆரம்பத்தில் இர்டாவிடம், நான்கு ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு அனுமதிக்கு விண்ணப்பித்து உள்ளது. இதில் மூன்று பங்கு சந்தை சார்ந்த காப்பீடு திட்டங்களாக இருக்கும். இத்திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான அனுமதி கிடைத்தவுடன் நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments: