Tuesday, November 10, 2009

அவுட் சோர்ஸிங் முறையில் நானோ கார் உற்பத்தி

இந்தியாவின் மிக குறைந்த விலை கார் என்ற பெருமைக்குரியது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார். ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த காருக்காக, 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், ஒரு லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தான் தற்போது நானோ கார் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நானோ காருக்காக, மேற்கு வங்கம் சிங்குரில் தான் முதலில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. ஆனால், உள்ளூரில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, இந்த தொழிற்சாலை குஜராத் மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. ஆனால், இன்னும் முழுமையாக ரெடியாக வில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தொழிற்சாலை செயல்பட துவங்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், அதற்குள் ஒரு லட்சம் பேருக்கு நானோ காரை சப்ளை செய்ய முடியுமா என்பது கேள்விக்குரியாக உள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ரவி காந்த் லண்டனில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் கூறுகையில்,' ஆண்டுக்கு 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த சிறு தொழிற்சாலைகளுக்கு, நானோ காரை அசெம்பள் முறையில், மாற்று பெயரில் தயாரிக்க அனுமதி அளிக்கப்படுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்று கூறினார். இது இந்திய கார் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட அவுட்சோர்ஸிங் முறையில் இப்பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்


No comments: