Friday, October 23, 2009

ஏற்றத்துடன் முடிந்தது இந்திய பங்குச் சந்தை

இன்றைய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றமே இந்திய பங்கு சந்தையிலும் எதிரெலித்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 217.03 புள்ளிகள் அதிகரித்து, அதாவது 1.29 சதவீதம் அதிகரித்து 17006.77 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 66.35 புள்ளிகள், அதாவது 1.33 சதவீதம் அதிகரித்து 5054.95 புள்ளிகளோடு தொடங்கியது.
அதன் பின், நண்பகலில் இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. முடிவில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. இறுதியாக பங்குவர்த்தகம் முடியும் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.07 புள்ளிகள் அதிகரித்து 16810.81 புள்ளிகளோடு நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து 4997.05 புள்ளிகளோடு நிலைபெற்றது.
அதிகம் லாபம் அடைந்த நிறுவனங்கள்: ஸ்டர்லைட் இன்டஸ்டிரி 834.05 ரூபாயாக 2.27 சதவீதமும், டாடா ஸ்டீல் 552.60 ரூபாயாக 1.77 சதவீதமும், செயில் 185.75 ரூபாயாக 1.67 சதவீதமும் லாபத்தை கண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் 2140.70 ரூபாயாக 0.34 சதவீதமும், இன்போசிஸ் டெக்னாலஜி 2,224 ரூபாயாக 0.57 சதவீதமும், விப்ரோ 584.95 ரூபாயாக 1.40 சதவீதமும், டி.எல்.எப் லிமிடெட் 462.80 ரூபாயாக 3.13 சதவீதமும் லாபத்தை கண்டன.
நன்றி : தினமலர்


No comments: