Friday, October 23, 2009

மீண்டும் எழுச்சி பெறுகிறது ரியல் எஸ்டேட் துறை

கடந்த மூன்று மாதங்களாக 30 லட்சத்திற்கும் மேல் குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை சிற்ப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், ரியல் எஸ்டேட் துறை மீண்டும் எழுச்சி பெற்றுவதுடன், அதிக வருமானத்தையும் ஈட்ட தொடங்கி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட கடும்‌ பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து தொழில் துறைகளும் கடும் விழுச்சியை சந்தித்தன. இதில் ரியல் எஸ்டேட் துறையும் தப்பவில்லை. அந்த நேரத்தில், ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெற்று வருகிறது. சென்ற செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டில் 7 கோடி சதுர அடி பரப்பளவு அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையாகி உள்ளன. இவற்றில் 75 சதவீதம் 30 லட்சத்திற்கும் குறைவானதாகும்.
நடப்பு 2009-10-ஆம் நிதி ஆண்டில் விற்பனையாகும் வீடுகளின் பரப்பளவு 19 கோடி சதுரஅடியைத் தாண்டிவிடும் என முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

நன்றி : தினமலர்


No comments: