Saturday, October 17, 2009

சீன பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிப்பு

சீனாவிலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் தான் நாட்டிலேயே அதிக அளவிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ. 3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இது இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் ஆகும். இவற்றில் 5 முதல் 10 சதவீத பட்டாசுகள் ஏற்றுமதி செய்யபடுகின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்டு விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்திய-சீன எல்லை மற்றும் நேபாளம், பங்களாதேஷ் எல்லைகள் வழியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் சீன பட்டாசுகள், வட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் பட்டாசுக் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தினமலர்


No comments: