Saturday, October 17, 2009

ஹாங்காங்கில் ஒரு பிளாட்டின் விலை ரூ.268 கோடி

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பிளாட் ரூ.268 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட பிளாட் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங் துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ள தீவுப் பகுதியில் இந்த அழகிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹெண்டர்சன் லேண்ட் டெவலப்மென்ட் இந்த குடியிருப்பை கட்டியது.அதில் உள்ள 5 படுக்கை அறைகளைக் கொண்ட டூப்ளக்ஸ் பிளாட் விற்பனை கடந்த வாரம் நடந்தது. 6,158 சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டை ரூ.267 கோடியே 90 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்த ஒருவர், ஒப்பந்தமும் செய்து விட்டார். இந்த வீட்டின் ஒரு சதுர அடியின் விலை ரூ.4.35 லட்சம். இந்த குடியிருப்பில் அதிநவீனமான சகல வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், இந்த வீட்டை வாங்குவதற்கும் போட்டி அதிகரித்து வருகிறது.
நன்றி :தினமலர்


2 comments:

குப்பன்.யாஹூ said...

what is the use of this news to me and you.

ஆர்வா said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ........