Saturday, October 17, 2009

நோய் நாடி நோய் முதல் நாடி...

மேலைநாட்டுப் பொருளாதார சிந்தனைகளின்படி, நகர்ப்புற மேம்பாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கு நேரெதிரான சிந்தனையை முன்வைத்தவர் அண்ணல் காந்தியடிகள். வளமான கிராமப்புறம் அமைந்தால் மட்டுமே நிலையான முறையான நகர்ப்புரம் செயல்பட முடியும் என்பதை மனதில்கொண்டு மகாத்மா காந்தி வெளிட்ட திட்டம்தான் 'கிராம ஸ்வராஜ்' என்பது.

அதேபோல சந்தைப்பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட முதலாளித்துவமும், தனிமனித ஊக்கத்துக்கு மரியாதை தராத பொதுவுடைமை சித்தாந்தமும் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று கருதி, 'கலப்புப் பொருளாதாரம்' என்ற பெயரில் ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து அதன்மூலம் ஏழை, பணக்கார இடைவெளியை குறைக்கும் முயற்சிக்கு முன்னுரிமை அளித்தார் பண்டித ஜவாஹர்லால் நேரு.

இப்போது 'கிராம ஸ்வராஜ்' என்பது அண்ணல் காந்தியடிகள் விரும்பியதுபோல அமையாமல் அதன் சிதைந்த பதிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கலப்புப் பொருளாதாரம் என்பது ஒட்டுமொத்தமாக கைகழுவப்பட்டு, சந்தைப்பொருளாதாரம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகளை சமீப காலமாக இந்தியா சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

கிராமப்புறங்களில் கல்வியறிவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம், ஆனால், விவசாயிகளும் சரி, விவசாயத்தொழிலாளர்களும் சரி தங்களது குழந்தைகளை படித்து பட்டணம் செல்லவேண்டும் என்று விரும்பிகிறார்களே தவிர, அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தத் தயாராக இல்லை. படித்த இளைஞர்களும் சரி, சட்டையின் மடிப்புர் கலையாமல் மின்விசிறிக்குக் கிழே அமர்ந்து வேலை பார்ப்பதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள்.

விளைவு? விவசாயம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. கிராமப்புற மக்கள் பட்டணம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். நகரங்கள் நிரம்பி வழிகின்றன. பலதடவை தயைங்கத்தில் தெரிவித்திருப்பதைப்போல முன்பெல்லாம் பெருநகரங்களான மும்பை, தில்லி, கோல்கத்தா மற்றும் சென்னையில் மட்டும் காணப்பட்ட குடிசைப்பகுதிகள் இப்போது தாலுகா தலைநகரம் வரை காளன்கள்போல உருவாகியிருகின்றன. பெருநகரங்களின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம்.

வேலைத்தேடிப் பெருநகரங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலோர் பள்ளிப்படிப்பை முடித்தவர்களாகவும் கல்லூரியில் கலை இலக்கியப் பட்டத்தாரிகளாகவும்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நகரங்களில் என்த அளவுக்கு வேலை கிடைத்துவிடும்? கணவனும், மனைவியும் வேலைக்குப் போனாலும் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தைத் தாண்டாதவர்கள்தான் இந்தியாவில் 60 சதவீதம் குடும்பங்கள்.

ஆங்காங்கே அரசியல் தாதாக்களின் ஆசீர்வாதத்துடன் உருவாகும் குடிசைப்பகுதிகளில்கூட ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறதே தவிர சுகாதார நிலைமை அவலத்திலும் அவலம். குறிப்பாக, சென்னையில் கூவத்தின் கரைகளிலும், பக்கிங்ஹாம் கால்வாய் ஒரமாகவும் அமைந்த குடிசைப்பகுதிகளிலும் வாழும் மனிதர்களின் நிலைமையை மனித உரிமை ஆணையம் ஏன் பொருட்படுத்துவதில்லை என்று தெரியவில்லை.

ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தை மத்திய வாட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படை நோக்கம் குடிசைவாழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அழர்களுக்கு நிரந்தரமான சிகாதார வசதிகளுடன் கூடிய வீட்டு வசதி செய்து கொடுப்பது.

முதலில், அமைச்சகத்திடம் குடிசைப்பகுதிகளைப் பற்றிய முறையான புள்ளிவிபரம் இருக்கிறதா என்பதேகூட சந்தேகம்தான். இப்போதுதான் பெரு நகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகள் பற்றிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சகத்தின் செயல்பாட்டு அறிக்கையின்படி, ஜவாஹர்லால் நேருõ தேசிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்பகீழ் 4.5 லட்சம் வீடுகள் குடிசைப்பகுதியில் வாழ்வோருக்காக 2012-க்குள் கட்டத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதில் 1.03 லட்சம் வீடுகள் கட்டப்பட்டடுள்ளதாக அந்த செயல்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. காலம் தாழ்த்தப்பட்டால் கட்டுமானச் செலவு அதிகரித்து, உத்தேசித்த இலக்கை அடையமுடியாது என்ரும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

குடிசைவாழ் மக்களுக்கு வீட்டு வசதி என்பது நல்ல விழயம். தேவையான விழயம். பணக்கார மற்றும் உயர் மத்திய தர வகுப்பினர் அவர்களே தங்களது வாட்டு வசதித் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு விடுகிறார்கள். கீழ் மத்திய தர வகுப்பினருக்கு வீடு கட்டித்தர அரசின் வீட்டு வசதி வாரியங்களுக்கும் கடன் தந்து உதவ வங்கிகளுக்கும் தனியார் நிறுவனங்களும் முன்வருகின்றன. குடிசைவாழ் மக்களின் கதிதான் என்ன?

இந்த பிரச்சனையில் நகர்ப்புற குடிசைப்பகுதியில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்துவம் கிராமப்புற வளர்ச்சியிலும் விவசாய முன்னேற்றத்திலும் காட்டாமல் போனால் நகர்ப்புறம் நோக்கி நகரும் கிராமவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கும். எத்தனை வீடுகள் கட்டினாலும் தேவை அதிகரிக்குமே தவிர குறையாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் அதேநேரத்தில் விவசாயத் தொழிலாளிகளுக்கும் அதிகரித்த கூலியும், விவசாயிகளுக்கு அதிக லாபமும் அடைய வழி காண்பது மட்டுமே உழைப்பின் மரியாதையை உயர வைத்து கிராமப்புற வளர்ச்சியை உறுதிப்படுத்தும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க நினைக்கிறார்களே..!.
நன்றி : தினமணி

No comments: