Tuesday, September 1, 2009

பன்றிக்காய்ச்சல் பீதியின் எதிரொலி : ஹிமாலயன் லிக்விடுக்கு கிராக்கி

பன்றிக் காய்ச்சல் பீதியால், பொதுமக்கள் அனைவரும் வருமுன் காப்போம் விழிப்புணர்வுக்கு ஓரளவு வந்துள்ளனர். இந்நிலையில் ஹிமாலயன் ஹெர்பல் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான கை சுத்திகரிப்பு திரவத்துக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. 4 வருடங்களுக்கு முன் இந்த லிக்விட் அறிமுகப்படுத்தப்பட்டது. விளம்பரத்துக்கு கூட அசைந்து கொடுக்காத இதன் மார்கெட்டிங் தற்போது, பன்றிக் காய்ச்சல் பீதியால் சூடு பிடித்துள்ளது. விற்பனையில் அனல் பறக்கிறது என்பது தகவல். தற்போதைய சூழலில், தேவை மட்டும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஹிமாலயா பிராடக்ட்ஸ் வியாபார தலைவர் சாகெட் கோர் தெரிவித்துள்ளார். பிராடக்ட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து கூறிய அவர், இது ஆல்கஹாலை மூலப் பொருளாக கொண்டு மிதமான நறுமனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கையில் ஊற்றி கழுவ வேண்டாம், கையில் ஊற்றி தேய்த்தவுடன் ஆவியாகி விடும் என்றார். இந்த மவுசால், விலை எகிறுமா என நிருபர்கள் கேட்டதற்கு : விலை உயர்த்தப்பவாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: