Monday, July 20, 2009

ஒரே கட்டுப்பாட்டு அறை மூலம் தனலட்சுமி ஏ.டி.எம்., கண்காணிப்பு

தனலட்சுமி வங்கியின் மத்திய கட்டுப்பாட்டு அறை கேமரா மூலம், அனைத்து ஏ.டி.எம்., வங்கிகளின் நடவடிக்கைளும் கண்காணிக்கப் பட உள்ளன. கேரளாவில் செயல்படும் தனலட்சுமி வங்கி, தனது தானியங்கி வங்கி சேவையை (ஏ.டி.எம்.,) மேம்படுத்தி, அதன்மூலம் 'தனித்துவ மாதிரி அயல் ஆதாரத் தீர்வையை' இந்தியாவிலேயே முதன் முறையாக அமல்படுத்த உள்ளது. இதற்காக, ஜெர்மனியின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கம்பெனி 'வின்கோர் நிக்ஸ்டாரின்' அங்கமான ஏ.ஜி.எஸ்., என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கியின் மூத்த அதிகாரியான ஆனந்த் குப்தா கூறுகையில், 'இப்புதிய திட்டத்தின் கீழ், வங்கியின் மத்திய கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேமரா மூலம் அனைத்து ஏ.டி.எம்.,களின் நடவடிக்கைகளும் மேற்பார்வை செய்யப்படும். இதனால், அதிக பாதுகாப்புடன் கூடிய சுலபமான சேவை மக்களுக்கு கிடைக்கும்' என்றார். வங்கியின் அனைத்து கிளைகளிலும் பாதுகாப்பு கருதி, டிஜிட்டல் அறிவிப்பு இடம் பெற உள்ளது.
நன்றி : தினமலர்


No comments: