Thursday, July 23, 2009

ஏர்-இந்தியா சலுகை கட்டண திட்டங்கள் அறிமுகம்

விமானப் பயணத்தை ஊக்கப்படுத்தும் வகையில், 'என்.ஏ.பி., - 3' மற்றும் 'ஏ.பி., - 3' என்ற இரண்டு சிறப்பு கட்டணங்களை ஏர்-இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனத்தின் அறிக்கை: விமானப் பயணத்தை ஊக்கப்படுத்த, 'என்.ஏ.பி., - 3' மற்றும் 'ஏ.பி., - 3' என்ற இரண்டு சிறப்பு கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'என்.ஏ.பி., - 3' என்ற சிறப்பு கட்டண டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உள்நாட்டு விமான நிலையங்களில் கிடைக்கும். இந்த கட்டணத்தில், அடிப்படை கட்டணம், பயணிகள் சேவை வரி ஆகியவை அடங்கும். எரிபொருள் சர்ச்சார்ஜ் கட்டணம் இதில் சேராது. இதன்படி, ஒருவழி கட்டணமாக மும்பை - ஐதராபாத் 2,079 ரூபாய்; மும்பை - பெங்களூரு 2,779 ரூபாய்; மும்பையில் இருந்து கொச்சி, சென்னை, டில்லி ஆகிய இடங்களுக்கு 3,279 ரூபாய்; டில்லி - சென்னை 3,779 ரூபாய் ஆகும். 'ஏ.பி., - 3' என்ற சிறப்பு கட்டண டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 உள்நாட்டு விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டணத்தில், அடிப்படை கட்டணம், பயணிகள் சேவை வரி மற்றும் எரிபொருள் சர்ச்சார்ஜ் கட்டணம் ஆகியவை அடங்கும். இதன்படி, மும்பையில் இருந்து உதய்பூர், கோவா ஆகிய இடங்களுக்கு 3,094 ரூபாய்; மும்பை - கோழிக்கோடு மற்றும் சென்னை - கோவா 4,499 ரூபாய்; மும்பை - திருவனந்தபுரம், சென்னை - கோல்கட்டா, டில்லி - ஐதராபாத் கட்டணம் 5,399 ரூபாய்; மும்பை - கோல்கட்டா, டில்லி - பெங்களூரு 5,919 ரூபாய் ஆகும். இந்த கட்டணங்கள் கொண்ட டிக்கெட்களை பயணிகள் மூன்று நாட்களுக்கு முன் வாங்க வேண்டும். இந்த சலுகையை வரும் செப்டம்பர் 20ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


2 comments:

ரவி said...

all the time dinamalar cut and paste ? i think u can do it from thats tamil. thats even better.

பாரதி said...

Thanks for your suggestion