Thursday, July 23, 2009

ஸ்டேட் பேங்க் கில் இருக்கும் பங்குகளை குறைத்துக்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மத்திய அரசு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளை குறைத்துக்கொள்ள மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக மத்திய அரசு காத்திருப்பதாக நிதி செயலர் அசோக் சவுலா தெரிவித்தார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்ற பின்னரே இது குறித்த மசோதா பார்லிமென்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர். இப்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மத்திய அரசுக்கு 59.41 சதவீத பங்குகள் இருக்கின்றன. அதை 55 சதவீதமாக குறைத்துக்கொள்ள இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே இதுகுறித்து ஜனவரி மாதத்தில் பேசிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேர்மன் ஓ.பி.பாத், ஸ்டேட் பேங்க் கின் பங்குகளை விற்பதன் மூலம் 200 கோடி முதல் 400 கோடி டாலர் வரை திரட்ட முடிவு செய்திருப்பதாக சொன்னார்.
நன்றி : தினமலர்


No comments: