Thursday, July 23, 2009

யெஸ் பேங்க்கின் நிகர லாபம் 84 சதவீதம் அதிகம் : 900 பேருக்கு வேலை

தனியார் வங்கியான யெஸ் பேங்க், இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.100.07 கோடியை நிகர லாபமாக பெற்றிருக்கிறது. இது, கடந்த வருடம் இதே காலாண்டில் அந்த வங்கி பெற்றிருந்த ரூ.54.33 கோடி நிகர லாபத்தை விட 84 சதவீதம் அதிகம். மும்பை பங்கு சந்தைக்கு அந்த வங்கி அனுப்பிய அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருட முதல் காலாண்டில் ரூ.486.19 கோடியாக இருந்த அந்த வங்கியின் மொத்த வருமானமும் இந்த வருட முதல் காலாண்டில் ரூ.687.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு காரணம் நிதியை திறம்பட கையாண்டதுதான் என்கிறார் யெஸ் வங்கியின் எம்.டி.மற்றும் சி.இ.ஓ. ராணா கபூர். முதல் காலாண்டில் 84 சதவீதம் அதிக லாபம் சம்பாதித்திருக்கும் யெஸ் பேங்க், வங்கி விரிவாக்கத்திற்காக இந்த நிதி ஆண்டில் 900 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: