Wednesday, July 22, 2009

சரிவில் முடிந்த பங்கு சந்தை

கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் இருந்த ஏற்ற நிலையால் சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 4,500 புள்ளிகளை ஒட்டியும் சென்றிருந்தது. பெரும்பாலான நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க நினைத்த முதலீட்டாளர்கள் இன்று பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் இறங்கி விட்டன. கேப்பிடல் குட்ஸ், ஐ.டி.,ஆட்டோ நிறுவன பங்கு மதிப்பு சரிந்திருந்தது. ஆனால் ரியாலிட்டி பங்கு மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 15,369.42 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 14,786.58 புள்ளிகள் வரையிலும் சென்றிருந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 219.37 புள்ளிகள் ( 1.47 சதவீதம் ) குறைந்து 14,840.63 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தையில் வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 4,557.95 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 4,380.45 புள்ளிகள் வரையிலும் சென்றிருந்த நிப்டி வர்த்தக முடிவில் 66.75 புள்ளிகள் ( 1.49 சதவீதம் ) குறைந்து 4,402.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று மும்பை பங்கு சந்தையில் கேப்பிடல் குட்ஸ் இன்டக்ஸ் 1.98 சதவீதமும், ஐடி இன்டக்ஸ் 1.78 சதவீதமும், ஆட்டோ இன்டக்ஸ் 1.78 சதவீதமும் இறங்கியிருந்தன. ஹெச்டிஎஃப்சி ( 5.51 % ), கிராசிம் இன்டஸ்டிரீஸ் ( 3.41 %), பெல் ( 3.38 % ), ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ( 2.86 % ) மற்றும் டாடா ஸ்டீல் ( 2.86 % ) ஆகிய நிறுவன பங்கு மதிப்பு குறைந்திருந்தன. ஓஎன்ஜிசி ( 4.36 % ), டிஎல்எஃப் ( 1.51 % ), ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் ( 0.93 % ), என்டிபிசி ( 0.72 % ), மற்றும் டாடா மோட்டார்ஸ் ( 0.29 % ) நிறுவன பங்குகள் உயர்ந்திருந்தன.
நன்றி : தினமலர்


No comments: