Wednesday, July 22, 2009

பத்திரங்கள் வெளியிட்டு 33.5 கோடி டாலர் திரட்ட டாடா பவர் திட்டம்

சர்வதேச சந்தையில் பத்திரங்களை வெளியிட்டு 33.5 கோடி டாலரை ( சுமார் 1,619 கோடி ரூபாய் ) திரட்ட டாடா பவர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அதன் எதிர்கால திட்டங்களுக்காக இந்த பணம் திரட்டப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஒவ்வொன்றும் 22.58 டாலர் என்ற விலையில் 1,48,38,110 குளோபல் டெபாசிடரி ரிசிப்ட்களை ( ஜிடிஆர் ) அது வெளியிடுகிறது. இதன் மொத்த தொகை 33.5 கோடி டாலர் என்று பாம்பே ஸ்டாக் எக்சேஞ்க்கு அது அளித்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் திரட்டப்படும் பணம், ஏற்கனவே இருக்கும் அதன் மின் உற்பத்தி நிலையங்களின் முதலீட்டு செலவினங்களுக்காகவும், கட்டிக்கொண்டிருக் கும் மின் உற்பத்தி நிலையங்களுக்காகவும் செலவு செய்யப்பட இருக்கிறது. நேற்று தான் டாடா ஸ்டீல் நிறுவனம் ஜிடிஆர் மூலம் 25 கோடி டாலரை திரட்டிக்கொள்ள அதன் போர்டு அனுமதி அளித்திருந்தது. இப்போது டாடா பவர் ஜிடிஆர் மூலம் 33.5 கோடியை திரட்ட இருப்பதாக அறிவித்திருக்கிறது. ஜிடிஆர் மூலம் பணம் திரட்டப்படுவதால், அதன் மூலம் நல்ல திறமையான முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள் என்று சொன்ன டாடா பவர் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( நிதி ) எஸ்.ராமகிருஷ்ணன். ஜிடிஆர் வெளியீட்டிற்காக டாடா பவர் நிறுவனம், லக்ஸம்பர்க் பங்கு சந்தை யில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: