Wednesday, July 22, 2009

அப்துல் கலாமிடம் மன்னிப்பு கேட்டது கான்டினென்டல் ஏர்லைன்ஸ்

சோதனையில் இருந்து விலக்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை புதுடில்லி விமான நிலையத்தில், மரபை மீறி சோதனையிட்ட கான்டினென்டல் ஏர்லைன்ஸ் இன்று அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. நேற்று அது அளித்த அறிக்கையில், எங்களது சட்டதிட்டப்படி வி.ஐ.பி., என்றோ வி.வி.ஐ.பி., என்றோ பிரித்து பார்த்து சோதனையிட அனுமதி இல்லை. எனவே இது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், மத்திய அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்திருந்ததாலும் இன்று அது கலாமிடம் மன்னிப்பு கோரி இருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனம் அளித்த அறிக்கையில், அப்துல் கலாமை சோதனையிட்டு, அவமானப் படுத்தி, அதன் மூலம் இந்திய மக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கமில்லை. எனவே நாங்கள் அப்துல் கலாமிடம் மன்னிப்பு கோருகிறோம். அவர் தொடர்ந்து எங்கள் விமானத்தில் பயணம் செய்வார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: