Wednesday, July 8, 2009

சரிந்தது பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று ரியாலிட்டி, பேங்கிங், இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெலிகாம், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் அதிகம் விற்கப்பட்டதால், சென்செக்ஸ் 14,000 புள்ளிகளுக்கு கீழும் நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழும் சென்று விட்டது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நிலையும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது. மே 18, 2009 க்குப்பிறகு முதல் முறையாக, வர்த்தகம் ஆரம்பித்த முதல் 15 நிமிடங்களிலேயே நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழே சென்று விட்டது. பின்னர் அது எவ்வளவு முயன்றும் 4,100 ஐ அடைய முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 401.30 புள்ளிகள் ( 2.83 சதவீதம் ) குறைந்து 13,769.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.25 புள்ளிகள் ( 2.93 சதவீதம் ) குறைந்து 4,078.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
nandri : dinamalar


No comments: