Saturday, July 18, 2009

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் 'பர்பிள்டெல்' சேவை அறிமுகம்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தனது பாலிசிதாரர்களின் ஆரோக்கியத்திற்காக தானியங்கி, தனிநபர், மொபைல் போன் மூலமான 'பர்பிள்டெல்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் சேவை மூலம் பாலிசிதாரர்களின் வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பிரச் னைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனைகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். பரிசோதனையில், பாலிசிதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நோய் இருப்பின், மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச் சை எடுத்துக் கொள்ள, இந்த சேவை உதவும். இது குறித்து, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: எங்கள் பாலிசிதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட தனிநபர் ஆரோக்கிய செயல்களை செய்ய நினைவுபடுத்துகிறோம். நீரிழிவு உள்ளிட்ட நீண்ட கால சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய நோயாளிகளுக்கு, உரிய நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், மருத்துவரை சந்திக்கவும் நினைவுபடுத்துவதன் மூலம் நிலைமையை சீராக் குவதுடன், சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
எங்கள் பாலிசிதாரர்கள் ஆரோக்கியத்துடன் வாழ இந்த சேவை உதவும். முதல் கட்டமாக, இந்த சேவை, எங்களிடம் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் பாலிசி எடுத்திருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு ஸ்ரீனிவாசன் பேசினார். இந்த அறிமுக நிகழ்ச்சியில், பர்பிள்டெல்லின் முதன்மைச் செயல் அதிகாரி நாராயண் ராம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர்கள் அஷ்டனா, கோஷ், ஜோசப் பிளாப்பலில் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்


No comments: