Saturday, July 18, 2009

முதல் நானோ காரை மும்பைவாசி பெற்றார்

உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் முதல் நானோ கார், ஒரு மும்பைவாசி வாடிக்கையாளருக்கு நேற்று வழங்கப்பட்டது. அசோக் ரகுநாத் விகாரே என்ற மும்பைவாசிக்கு முதல் நானோ காரின் சாவியை நேற்று டாடா மோட்டார்ஸ் சேர்மன் ரத்தன் டாடா வழங்கினார். டாடா மோட்டார்ஸின் பெருமைமிகு காரான நானோ வை அதன் சேர்மன் ரத்தன் டாடாவிடமிருந்து பெற்றதில் அதிக மகிழ்ச்சி அடைந்ததாக ரகுநாத் தெரிவித்தார். நானோவின் சிறந்த வகை மாடலான நானோ எல்எக்ஸ் ( லூனார் சில்வர் ) காரை அவர் பெற்றார். இதன் மூலம், முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நானோ காரை சப்ளை செய்யும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மீதி பேருக்கு நானோ கார் சப்ளை செய்யப்பட்டு விடும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. முதல் காருக்கான சாவியை ரகுநாத்திடம் வழங்கி பேசிய ரத்தன் டாடா, அதிகம் புகையை கக்காத, நவீன வசதிகள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிற, ஓட்டுவதற்கு சுகமாக இருக்கிற, நகரங்களுக்கு ஏற்ற, சிறந்த கார் ஒன்றை ரகுநாத் பெற்றிருக்கிறார் என்றார். ரகுநாத்திற்கு அடுத்ததாக, இரண்டாவது நானோ காரை ஹெச்டிஎஃப்சி பேங்க் ஊழியரான ஆசிஸ் பாலகிருஷ்ணன் ( எல்எக்ஸ் - சன்ஷைன் யெல்லோ ) என்பவரும், மூன்றாவது காரை கோரஸ் இந்தியாவும் ( எல்எக்ஸ் - லூனார் சில்வர் ) பெற்றனர்.
நன்றி : தினமலர்


2 comments:

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Anonymous said...

Hi

னேனோ கார் வாங்கிய அஷோகிராகுநத் அவர்ஹலுகு எங்களுடைய வாழ்த்துக்கள்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்