Tuesday, July 28, 2009

புதிய 50 ரூபாய் நோட்டு

கடந்த 2005ல் வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டில், சிறு மாற்றம் செய்து புதிய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதுகுறித்து, இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் எம்.எம். மாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட, மகாத்மா காந்தி வரிசை 2005ம் ஆண்டைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகளில் இரு வரிசை எண்களுக்கும் நடுவே உட்பொதிந்த ஆங்கில எழுத்து இல்லாத 50 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ., விரைவில் வெளியிட உள்ளது. இந்த மாற்றம் தவிர, இப்போது வெளியிடப்படும் நோட்டுகளின் வடிவம் ஆகஸ்ட் 24, 2005ல் வெளியிடப்பட்ட கூடுதலான, புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளை எல்லா விதத்திலும் ஒத்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, இதற்கு முன் வெளியிட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுக்களும் சட்டப் படி செல்லத்தக்கவையே.
நன்றி : தினமலர்


No comments: