Monday, April 13, 2009

ஏறியது பங்கு சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பேங்கிங், மெட்டல், ரியல் எஸ்டேட், ஆட்டோ, ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் இன்று பெருமளவில் வாங்கப்பட்டதால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன. இன்று வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 11,000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,400 புள்ளிகளுக்கு மேலும் சென்றது. காலை வர்த்தகம் ஆரம்பித்து மதியம் ஆகியும் சந்தை அவ்வளவாக உயராமலும் குறையாமலும்தான் இருந்தது. பின்னர்தான் வேகமாக உயர துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 163.36 புள்ளிகள் ( 1.51 சதவீதம் ) உயர்ந்து 10,967.22 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 40.55 புள்ளிகள் ( 1.21 சதவீதம் ) உயர்ந்து 3,382.60 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. சத்யத்தின் பங்குகள், பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் டெக் மகேந்திராவுக்கு விற்கப்படுவ தால், சத்யத்தின் பங்கு மதிப்பு இன்று 3.61 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதன் பங்குகள் இன்று 239.40 சதவீதம் கூடுதலாக கைமாறி இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: