Monday, April 13, 2009

டெக் மகேந்திராவின் கைக்கு செல்கிறது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் வாங்கிக்கொள்வதாக டெக் மகேந்திரா தெரிவித்திருந்ததால், அவர்களிடம் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகள் விற்கப்படுகிறது. பங்கு ஒன்றை ரூ.49.50 என்ற விலையில் வாங்கிக்கொள்வதாக லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் தெரிவித்திருந்ததால் அவர்களுக்கு சத்யம் கிடைக்காமல் போய் விட்டது. சத்யத்தை வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்கள், என்ன விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை இன்று ( 13.04.09 ) காலை 9 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சத்யம் கம்ப்யூட்டர்ஸின் போர்டு தெரிவித்திருந்தது. வாங்க விருப்பம் தெரிவித்தவர்கள் எல்லோரும் இரண்டு கவர்களை கொடுத்திருந்தனர். ஒன்றில் அவர்களது டெக்னிக்கல் விபரங்கள் இருந்தது. இன்னொன்றில் நிதிநிலை குறித்த விபரம் இருந்தது. டெக்னிக்கல் விபரங்களில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஒருவரது நிதி நிலவரம் குறித்த விபரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், ஒரே மாதிரியான விலையை குறிப்பிட்டு, ஒரே வரிசையில் இருந்தால், அவர்களில் ஒருவர் ஓப்பன் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் இருந்தது. ஆனால் இப்போது அதற்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. மகேந்தியா அண்ட் மகேந்திராவின் கம்ப்யூட்டர் பிரிவு நிறுவனமான டெக் மகேந்திரா தான் அதிக விலைக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்திருப்பதால், அவர்களுக்கே சத்யத்தில் 51 சதவீத பங்குகளை விற்க அதன் போர்டு முடிவு செய்திருக்கிறது. எனினும் அதன் இறுதி முடிவு கம்பெனி லா போர்டு கையில் தான் இருக்கிறது. இது குறித்து கம்பெனி லா போர்டு தெரிவிக்கையில், சத்யத்தின் 31 சதவீத பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் வாங்கிக்கொள்ள முன்வந்திருக்கும் டெக் மகேந்திரா, ஒரு விண்ணப்பத்தை வரும் வியாழக்கிழமைக்குள் எங்களிடம் அளிக்க வேண்டும் என்றும், அதற்கு 24 மணி நேரத்திற்குள் பதில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. சத்யத்தை வாங்க எல் எண்ட் டி, டெக் மகேந்திரா, காஹ்னிசென்ட்,மற்றும் வில்பர் ரோஸ் நிறுவனங்கள் போட்டியிட்டன.
நன்றி : தினமலர்


No comments: