Monday, April 6, 2009

இன்றும் ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

பங்கு சந்தையில் இன்று முழுவதும் ஏற்ற நிலையிலேயே இருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, முறையே 10,500 புள்ளிகளுக்கு மேலும் 3,250 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. நிப்டி தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து பங்கு சந்தை நிபுணர் அஸ்வானி குஜ்ரால் கருத்து தெரிவிக்கையில், இப்போது நிப்டி 3,100 - 3,150 புள்ளிகளை தக்க வைத்துக்கொண்டிருப்பதால், அது மேலும் உயர்ந்து 3,700 புள்ளிகள் வரை வந்து விடும் என்றார். இன்றைய வர்த்தகத்தின் போது மெட்டல், கேப்பிட்டல் குட்ஸ், ஆட்டோ, ரியல் எஸ்டேட், மற்றும் பேங்கிங் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. இன்று ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் உயர்ந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 186.04 புள்ளிகள் ( 1.80 சதவீதம் ) உயர்ந்து 10,534.87 புள்ளிகளில் முடிந்திருக் கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 45.55 புள்ளிகள் ( 1.42 சதவீதம் ) உயர்ந்து 3,256.60 புள்ளிகளில் முடிந்திருக் கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் லாபம் சம்பாதித்தது எம் அண்ட் எம் ( 14.26 % ), ரிலையன்ஸ் கம்யூனி கேஷன் ( 11.19 % ), எல் அண்ட் டி ( 7.40 % ), ஹெச்.டி.எஃப்.சி. ( 7.37 %), மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா ( 6.47 % ) நிறுவனங்கள் தான்.
நன்றி : தினமலர்


No comments: