Monday, April 6, 2009

ஜி - 20 மாநாடு ஒரு திருப்புமுனையாக இருந்தது : ஒபாமா

சர்வதேச நிதி பிரச்னையை தீர்க்க, ஜி - 20 நாடுகள் ஒன்றுபட்டு, ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெகுவாக பாராட்டினார். மேலும், அங்கு செய்யப்பட்ட ஒப்பந்தம், பிரச்னையை தீர்க்க ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றார். இரு நாட்கள் நடந்த மாநாட்டில், உறுப்பு நாடுகள் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்றி, அதன் மூலம் உலக பொருளாதார சீர்குழைவுக்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்கள் என்று அவர் பாராட்டினார். உலக பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் தடுக்க உலக பொருளாதார நாடுகள் எல்லாம் ஒன்று கூடி ஒத்துழைத்தது பாராட்டத்தக்கது என்றார். எல்லா நாட்டு வங்கிகளும் வீழ்ச்சியில் இருந்து எழுந்து வந்து, மீண்டும் கடன் கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லோருமாக சேர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எல்லோரும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மீண்டும் வேலைவாய்ப்பை உண்டாக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார். உலக பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்தது தான் அமெரிக்க பொருளாதாரம். எனவே அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டுமானால், உலக பொருளாதாரம் சரியாக வேண்டும் என்றார் ஒபாமா.
நன்றி : தினமலர்


No comments: