Monday, April 6, 2009

சத்யம் யாருக்கு ? : ஏப்ரல் 13ம் தேதி தெரிந்து விடும்

நிதி மோசடியில் சிக்கி, வழக்கை சந்தித்து வரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை யாருக்கு விற்கப்போகிறார்கள் என்பதை, வரும் 13ம் தேதி அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. சத்யத்தை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பிப்பவர்கள் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஏற்கனவே இது ஏப்ரல் 9 ம் தேதி என்று இருந்தது. சத்யத்தை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களில் பலர், சத்யத்தின் நிதி நிலை, மற்றும் கடன் விபரம் போன்ற பல விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பியதால், கடைசி தேதி 9 ம் தேதியில் இருந்து 13ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. எனவே விண்ணப்பிக்க கடைசி நாளான 13 ம் தேதியே யாருக்கு கொடுக்க இருக்கிறோம் என்பதையும் அறிவித்து விடலாம் என்றார் சத்யத்தின் இப்போதைய சேர்மன் கிரண் கார்னிக். எத்தனை விண்ணப்பங்கள் வந்தாலும் அவைகளை சரிபார்த்து முடிவு செய்ய போதிய வசதிகள் இருக்கின்றன என்றார் அவர். சத்யத்தின் முந்தைய சேர்மன் ராமலிங்க ராஜூ, அவர் சகோதரர் ராம ராஜூ மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இருந்த வட்லமணி ஸ்ரீநிவாஸ் ஆகியோர், ரூ.7,800 கோடி அளவில் நிதி மோசடி செய்து, சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கை சந்தித்து வருவதால், சத்யத்தின் 51 சதவீத பங்குகளை விற்று விட, அதன் இப்போதைய போர்டு முடிவு செய்து, அதற்காக வாங்க விருப்பம் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரி இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: