Tuesday, March 3, 2009

நவம்பர் நிலையை விடவும் கீழே இறங்கியது பங்கு சந்தை

இன்று நாள் முழுவதும் நிலை தடுமாறி இருந்த மும்பை பங்கு சந்தையில், கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது பெஞ்ச்மார்க் இன்டக்ஸ் வேகமாக குறைய துவங்கியது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நவம்பரின் குறந்த பட்ச அளவான 8451 புள்ளிகளையும் விட கீழே இறங்கி விட்டது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் 2,650 புள்ளிகளையும் விட கீழே இறங்கி விட்டது. இன்று பெரும்பாலும் எல்லா துறை பங்குகளும் மதிப்பை இழந்திருந்தன. இருந்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது எப்.எம்.சி.ஜி., டெலிகாம், டெக்னாலஜி, பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ், மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் தான். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து ரூ.52 வரை வந்து விட்டதால், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களும் அதிக அளவில் பங்குகளை விற்க ஆரம்பித்து விட்டார்கள். இன்றைய வர்த்தகத்தில் 1,030 நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன. 1,850 நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தன. 167 நிறுவன பங்குகளில் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 179.79 புள்ளிகள் ( 2.09 சதவீதம் ) குறைந்து 8,427.29 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 52.20 புள்ளிகள் ( 1.95 சதவீதம் ) குறைந்து 2,622.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த கம்பெனிகள் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஓ.என்.ஜி,சி, பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ.,இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ பேங்க், டாடா பவர், பெல் மற்றும் எல்.ஐ.சி.
நன்றி : தினமலர்


No comments: