Tuesday, March 3, 2009

மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு மீண்டும் ரூ.5 லட்சம் கோடியை தாண்டியது

நான்கு மாத இடைவேளைக்குப்பின் மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு மீண்டும் ரூ.5 லட்சம் கோடியை தாண்டியிருக்கிறது. தொடர்ந்து ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கிறது. பிப்ரவரி கடைசியியில் கணக்கிட்டபோது அதன் ஆவரேஜ் ஏ.யு.எம் ( அசட் அன்டர் மேனேஜ்மென்ட் ) ரூ.5,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு ரூ.40,000 கோடி ( 8.8 சதவீதம் ) அதிகரித்திருக்கிறது. இந்த உயர்வுக்கு காரணம், வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் மக்கள் பெருமளவில் முதலீடு செய்ய முன் வந்ததுதான் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 34 மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ்களில் ஜனவரி மாதம் முடிய ரூ.4,60,948.99 கோடியாக இருந்த ஏ.யு.எம்., பிப்ரவரி மாத கடைசியில் ரூ.5,00,973.37 கோடியாக உயர்ந்திருக்கிறது. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ரூ.5,00,000 கோடியை தாண்டியிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்டின் ஏ.யு.எம்., இதற்கு முன் கடந்த வருடம் செப்டம்பரில் ரூ.5,28,871.75 கோடியாக இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: