Tuesday, March 3, 2009

திருமயத்தில் பெல் தொழிற்சாலை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் ( பெல் ) புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க இருக்கிறது. இதற்காக முதல் கட்டமாக ரூ.250 கோடியை முதலீடு செய்யும் பெல் நிறுவனம், அங்கு பாய்லருக்கு தேவையாக உபரணங்களை முதலில் தயார் செய்யும். இது குறித்து பெல் வெளியிட்ட அறிக்கையில், திருமயத்தில் அமைய இருக்கும் தொழிற்சாலையால் நேரடியாக 750 பேருக்கும், மறைமுகமாக சுமார் 3,000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது. அங்கு அமைய இருக்கும் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் சுமார் ரூ.500 கோடிக்கு வரவு செலவு இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் 11 ம் மற்றும் 12 ம் திட்டத்தின்போது, மின்உற்பத்தி துறைக்கு தேவையான உபகரணங்கள் அதிக அளவில் தேவையாக இருக்கும் என்பதால், அதனை சந்திக்க பெல் நிறுவனத்திற்கு கூடுதலாக தொழிற்சாலை தேவைப்படுகிறது என்று அதன் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் ரவிக்குமார் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: