Friday, March 20, 2009

லேசான இறக்கத்துடன் முடிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்திருக்கிறது. இன்று பெரும்பாலான நேரங்களில் குறியீட்டு எண்கள் குறைந்தேதான் இருந்தன. இருந்தாலும் நிப்டி 2,800 புள்ளிகளுக்கு மேலேயே இருந்து முடிந்திருக்கிறது. மெட்டல், ஓ என் ஜி சி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.யு.எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், அம்புஜா சிமென்ட்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐடியா செல்லுலார், விப்ரோ, டாடா பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் மதியத்திற்கு மேல் கொஞ்சம் உயர்ந்திருந்ததால் ஆரம்பத்தில் அதிகம் சரிந்திருந்த சந்தை, பின்னர் கொஞ்சம் மேலே வந்தது. இருந்தாலும் கேப்பிடல் குட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ் பி ஐ, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி, டி சி எஸ், டி எல் எஃப், மற்றும் ஐ டி சி பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 35.07 புள்ளிகள் ( 0.39 சதவீதம் ) குறைந்து 8,966.68 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 0.10 புள்ளிகள் மட்டும் குறைந்து 2,807.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: