Friday, March 20, 2009

சத்யம் போர்டு இன்று கூடுகிறது

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நியமித்த போர்டு, இன்று கூடி, சத்யத்தின் 51 சதவீ பங்குகளை கேட்டு வந்த விண்ணப்பங்களை பரீசிலிப்ப்து குறித்து ஒரு திட்டம் வகுக்கும் என்று சொல்லப்படுகிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அதன் 51 சதவீத பங்குகளை விற்க முன்வந்து, ஆர்வம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லியிருந்தது. மார்ச் 9ம் தேதியில் இருந்து மார்ச் 20 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தது. இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. குறைந்த பட்சம் ரூ.1,500 கோடி வைத்திருப்பவர்கள் மட்டும் ( அதற்கான சான்றுதழ்களுடன் ) விண்ணப்பிக்குமாறு கேட்டிருந்தது. தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூஷா நியமிக்கப்பட்டிருப்பதாக மார்ச் 13ம் தேதி சத்யம் போர்டு தெரிவித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகளை வாங்க, இஞ்சினியரிங் நிறுவனமான எல் அண்ட் டி ( ஏற்கனவே இதற்கு சத்யத்தில் 12 சதவீத பங்குகள் இருக்கின்றன ), டெக் மகேந்திரா, பி.கே. மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் குரூப், ஐகேட் கார்பரேஷன், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம். ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
நன்றி : தினமலர்


No comments: