Friday, March 20, 2009

காரை பறிமுதல் செய்த வங்கி ரூ.35,000 நஷ்டஈடு கொடுக்க வேண்டும்

கார் லோன் வாங்கி, இரண்டு தவணைகள் பணம் கட்ட தவறிய ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து காரை பறிமுதல் செய்த ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.35,000 கொடுக்க வேண்டும் என்று டில்லி கன்சூமர் கமிஷன் தீர்ப்பளித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும், பணம் கட்ட தவறிய வாடிக்கையாள ரிடமிருந்து காரை பறிமுதல் செய்திருந்தால் அது வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய செயலாகத்தான் கருதப்படும் என்றும், அதற்கு வங்கி நஷ்டஈடு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றும் நீதிபதி ஜே.டி.கபூர் தலைமையிலான கன்சூமர் கமிஷன் தெரிவித்திருக்கிறது. கட்டாத தவணைக்கு அபராதம் வேண்டுமானால் வங்கி விதித்துக்கொள்ளலாம் என்றும் அதற்காகவெல்லாம் காரை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் அது தெரிவித்திருக்கிறது. டில்லியில் இருக்கும் ரிலையபிள் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போஷிசன்ஸ் என்ற நிறுவனம், 2006 ஜனவரி மாதத்தில் மாருதி எஸ்டீம் கார் வாங்குவதற்காக ஹெச்.டி.எஃப்.சி., வங்கியில் ரூ.4.56 லட்சம் கடன் வாங்கியிருந்தது. அதற்கான கடன் தொகையில் இரண்டு தவணைகளை அந்த நிறுவனம் செலுத்தவில்லை. இதனால் 2006 ஜூலை மாதத்தில் அந்த காரை ஹெச்.டி.எஃப்.சி.,வங்கி பறிமுதல் செய்து விட்டது. மேலும் இது குறித்து நடந்து வந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பு சொல்வதற்கு முந்தின நாள் அந்த காரையும் வங்கி வேறு நபருக்கு விற்று விட்டது.
நன்றி : தினமலர்


No comments: