Monday, March 16, 2009

டாடாவின் ' நானோ ' வருகையால் ஆட்டோ ரிக்ஷா விற்பனை பாதிக்கும் ?

உலகின் மிக மலிவான கார் ' நானோ ' விற்பனைக்கு வர இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்நிலையில் அதன் வருகையால் ஆட்டோ சந்தையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்போதே ஆராய துவங்கிவிட்டன. ' நானோ ' கார் வருகையால் ஆட்டோ ரிக்ஷா விற்பனை படுத்து விடும் என்று சில கம்பெனிகள் கருதுகின்றன. ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவர்கள் இனிமேல் ' நானோ ' வில் செல்ல ஆரம்பிப்பார்கள் என்கின்றனர் சிலர். மாருதி 800 கார் விற்பனையை நானோ குறைக்கும் என்கின்றனர் சிலர். பழைய கார் வாங்குபவர்கள் மற்றும் அதிக விலை மோட்டார் சைக்கிளை வாங்குபவர்கள் இனிமேல் நானோ வுக்கு மாறுவார்கள் என சில நிறுவனங்கள் கருதுகின்றன. ஆனால் ' நானோ ' வால் வரக்கூடிய உண்மையான அபாயம், அதன் டீசல் மாடல் கார் வெளிவரும்போதுதான் இருக்கும் என்கிறார்கள் பலர். இப்போதைக்கு வெளிவரும் பெட்ரோல் கார், முதல் வருடத்தில் வருடத்திற்கு ஒரு லட்சம் தயாரிக்கப்படுகிறது. பின்னர், அதன் தொழிற்சாலையில முழு அளவிலான தயாரிப்பு துவங்கியதும் அதை விட அதிக அளவில் தயாரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. நானோ காரால் ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து, இந்தியாவின் மிகப்பொரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் சேர்மன் ஆர்.சி.பார்கவா கருத்து தெரிவித்தபோது, ஆட்டோ ரிக்ஷாவின் விலையில் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே ' நானோ ' கிடைக்கிறது. ஆட்டோ அளவுக்கு ' நானோ 'வும் கிலோ மீட்டர் கொடுக்கும். மேலும் ஆட்டோவை விட ' நானோ ' அதிக தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும். எனவே ஆட்டோ ரிக்ஷாவுக்கு நிச்சயமாக ' நானோ ' ஒரு மாற்று வாகனமாக இருக்கும் என்றார். இந்தியாவில் வருடத்திற்கு 3,00,000 ஆட்டோ ரிக்ஷாக்கள் விற்பனையாகின்றன. அதன் விலை ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்கிறது. மேலும் ' நானோ ' வின் வருகையால் மாருதி 800 விற்பனையும் கொஞ்சம் பாதிக்கும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், ரூ.2 லட்சம் அளவில் கிடைக்கும் மாருதி 800 காருக்கு பதிலாக ஏன் ரூ.ஒரு லட்சத்தில் ' நானோ ' னை வாங்கக்கூடாது என்று கார் பிரியர்கள் எண்ணுவது இயற்கைதான் என்றார்.
நன்றி : தினமலர்


No comments: