Monday, March 16, 2009

ரிடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திடமிருந்து 350 மில்லியன் டாலர் ஆர்டர் பெற்றது ஹெச்.சி.எல்

பிரபல மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட், 350 மில்லியன் டாலர் ( சுமார் 1,785 கோடி ரூபாய் ) மதிப்புள்ள ஐ.டி.அவுட்சோர்சிங் வேலைக்கான ஆர்டரை ஹெச்.சி.எல்.,க்கு கொடுத்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம், ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திற்கு தேவையான ஐ.டி.தொடர்பான வேலைகளை ஏழு ஆண்டுகளுக்கு ஹெச்.சி.எல் நிறுவனம் செய்து கொடுக்கும். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டு ஐ.டி.தொழில் முடங்கிப்போயிருக்கும் இந்த வேளையில் இப்படியொரு ஆர்டர் ஹெச்.சி.எல்.,க்கு கிடைத்திருப்பது பெரிய விஷயமாக சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து ரீடர்ஸ் டைஜஸ்டின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( சர்வதேச நடவடிக்கைகள் ) அல் பெரூசா தெரிவிக்கையில், ஐ.டி., வேலைகளில் செலவையும் குறைத்து அதே நேரத்தில் நல்ல சேவையையும் ஹெச்.சி.எல்., அளிக்கும் என்று நாங்கள் நம்புவதால் இந்த வேலையை அவர்களிடம் கொடுத்திருக்கிறோம் என்றார்.
நன்றி: தினமலர்


No comments: