Wednesday, March 11, 2009

மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக முதலீடு செய்வதை ஐ.பி.எம்.நிறுத்தவில்லை

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், பிரபல ஐ.டி.நிறுவனமான ஐ.பி.எம்., மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக செய்யும் முதலீட்டை குறைக்கவில்லை. ஐ.பி.எம்.மின் தலைமை அதிகாரி சாமுவேல் பால்மிசனோ, அதன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும் நாங்கள் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள் பின்நோக்கி பார்ப்பது இல்லை. எப்போதுமே முன்நோக்கி தான் பார்க்கிறோம். தொடர்ந்து ஆர் அண்ட் டி சென்டர்களை நிறுவுவதிலும், மற்ற கம்பெனிகளை வாங்குவதிலும், வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுவதிலும் முதலீடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த இக்கட்டான வேளையிலும் நாங்கள் ஊழியர்களை குறைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில்தான் ஐ.பி.எம். நிறுவனம், நிதி மோசடியில் சிக்கியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்திருந்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸூம் அதன் 51 சதவீத பங்குகளை விற்கும் ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: