Thursday, March 12, 2009

ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்வு

உணவு தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்த்தப் பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், ஓட்டல் உரிமையாளர்கள் பலர், சாப்பாடு வகைகளில் ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விலை ஏற்றத் தை சப்தம் இன்றி அரங்கேற்றி உள்ளனர்.
சேலம், திருச்சி, திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ரூ.25க்கு விற்கப்படும் அளவு சாப்பாடு ரூ.26க்கும், ரூ.30க்கு விற்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு ரூ.31க்கு விற்கப்படுகிறது.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில் தற்போது ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட அளவு சாப்பாடு ரூ.31க்கும், ரூ.40க்கு விற்பனை செய்யப்படும் ஸ்பெஷல் சாப்பாடு ரூ.42க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டல்களில் சாப்பாடு விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, டிபன் வகைகளிலும் விலை உயர்வு செய்யப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.
இது குறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''அரிசி, பருப்பு வகைகள் மட்டுமின்றி மளிகை சாமான் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வில் இருந்து தப்பிக்கவும், எங்கள் தொழிலை காப்பாற்றும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற் பட்டுள்ளது. முதல் கட்டமாக சாப்பாடு விலையை உயர்த்தி உள்ளோம்.
''வரும் 1ம் தேதிக்குள் மூலப்பொருட்களின் விலையில் சரிவு ஏற்படாத பட்சத்தில் டிபன் வகைகளின் விலையை இரண்டு ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: